search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டுப்பாளையத்தில் கட்டிடத்தொழிலாளி தற்கொலை"

    மேட்டுப்பாளையம் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிடத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது38.) கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (28). இவர்களுக்கு ஒருமகன். ஒரு மகள் உள்ளனர். வடிவேலுவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். சம்பத்தன்று இரவும் வடிவேலு குடித்துவிட்டு வந்தார். அதனை ராஜேஸ்வரி கண்டித்த போதும் அவர் வீட்டிற்குள் தூங்கச் சென்று விட்டார். இந்த நிலையில் காலை 7 மணிக்கு ராஜேஸ்வரி தனது கணவரை எழுப்பி இப்படி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் மகன்களுடன் எங்கோ சென்று விடுவேன் என்று கூறிவிட்டு மகன்களுடன் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வடிவேல் மின்விசிறியில் தூக்குப்போட்டார்.

    சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலக், ஏட்டு ராம்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×